நான் எந்த வழியை தேர்வு செய்ய வேண்டும்?

Help us to spread

நாத்திகர்கள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டாலும், பலர் விசுவாசத்திற்கும் உயிருள்ள தேவனைப்பற்றிய அறிவிற்கும் வருகிறார்கள். தேடும் இந்த பயணத்தில், அவர்களில் பலர் மதங்களில் சிக்கியுள்ளதால், எது தேவனிடம் செல்லும் சரியான வழி என்று குழப்பமடைந்து வருகின்றனர்.

இருப்பினும், கிறிஸ்தவ மதத்தில் கூட, கோட்பாட்டு வேறுபாடுகள் காரணமாக கர்த்தரின் ஆலயத்திர்க்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிளவிற்க்கு கிறிஸ்தவ கோட்பாடு மட்டும் காரணம் அல்ல.சரியான கிறிஸ்தவ கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாததும் கீழ்ப்படியாததும் பிரிவினைக்கு காரணமாகிறது,

இந்த குழுவிலிருந்து பலர், இயேசு கிறிஸ்துவே  கர்த்தர் என்றும் இரட்சர் என்றும் அவரே இரட்சிப்பின் ஒரே வழி என்ற உண்மையை அறிந்து கொண்டார்கள், ஆனால் சில விசுவாசிகளிடையே சரியான கூடுகை எது என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன.

உண்மையான,உயிருள்ள தேவன் யார்?சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா?நான் எந்த கூடுகையில் கலந்து கொள்ள வேண்டும்?வல்லமை மிகுந்த கோட்பாடுகள் யாவை?நான் எந்த வழியை தேர்வு செய்ய வேண்டும்?உண்மையான வழி எது?

இந்த கேள்விகள் அனைத்தையும் நீங்கள் கொண்டவரா? ஆம் எனில், பதில்களை அறிய வேதத்தை வாசியுங்கள். உங்கள் எல்லா சந்தேகங்களையும் வேதத்தில் உள்ள தேவனுடைய வார்த்தையிகளினால் மட்டுமே தீர்க்க முடியும்.

உண்மையான வழியைக் கண்டுபிடிப்பது யார்?

வேதம் கூறுகிறது,

எரேமியா 29: 13 “உங்கள் முழு இருதயத்தோடும்  என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

நீங்கள் முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேட ஆரம்பித்தால் நீங்கள் அவரைக் காண்பீர்கள். மேலும்,

அப்போஸ்தலர் 17: 11- தெசலோனிகேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் பெரோயா மக்கள் நற்குணசாலிகளாய் இருந்தனர், மேலும் அவர்கள் பவுலின் செய்தியைக் ஆவலுடன் கேட்டார்கள். பவுலும் சீலாவும் உண்மையை கற்பிக்கிறார்களா என்று அவர்கள் தினம்தோரும் வேதவசனங்களைத் தேடினார்கள்.

போலி நாணயத்தைப் புரிந்துகொள்வதும் சரியான நாணயத்தைப் பயன்படுத்த அவர்களைத் தூக்கி எறிவதும் போல, இந்த இறுதிக் காலங்களிலும் தவறான கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு சரியான போதனைகளையும் கூடுகைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்காக உங்கள் முழு இருதயத்தோடும் ஜெபியுங்கள், கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் நேசியுங்கள்,அப்பொழுது அவரைத் தேடுகிறவர்கள் அவரையும், அவருடைய வார்த்தையையும் கண்டடைவீர்கள்.

“என் கற்பனைகளை பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்.என்னிடதில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், என் பிதாவும் அவர்கள் மேல் அன்பாயிருப்பார். நானும் அவனில் அன்பாயிருந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னை வெளிப்படுத்துவேன்.”- யோவான் 14:21

Print Friendly, PDF & Email

Menu

Translate:

Translate »